புதன், 8 மார்ச், 2017

வயது 14

மீன் பிடி விற்பன்னர்களின்
மீன் கொலைகளம்

மயக்கம் வரவழைக்க
பின் சென்று வரலாமென

நடந்த எனக்கு
அங்கே வரவேற்ப்பு

இருபது முதல்
நாற்பது வயதில்
மரங்கள் எல்லாம்

விகார அளவில்
மலர்களும் காய்களும்
தாங்கிச்
சிரித்துக்கொண்டிருந்தன
தொட்டிகளில்

என் வயது 14
என்றபடி
தொட்டிக்குள்ளே ஒரு ஆலமரம்

மனதை ஏதோ பிசைய
பீறிட்டுக்கொண்டு
வந்தது அழுகை எனக்கு

இங்கு எந்த உயிருக்குமே
வாழும் சுதந்திரம் இல்லையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக