செவ்வாய், 13 டிசம்பர், 2016

திரிபு

சில வருடங்களுக்கு முன் எப்போதும் அமைதியாகவும், சூழ்நிலைகளால் பாதிக்கபடாமல் தன் வேலையை திறனாக செய்பவர்களை பார்த்தால் பிரம்மிப்பாக இருக்கும். அவர்களை ஆய்ந்து பார்த்ததில், அவர்கள் தன் மனதில் வந்து விழும் உரசல்கள், வெறுப்பு விஷயங்களை, அன்பாகவும் கருணை உணர்வாகவும் மாற்றி விட கற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது. தங்கள் இயல்பை மாற்றிக்கொள்வதற்கு முதலில் தாங்க முடியாத துயரம் வந்து அதிலிருந்து வெளிவர தவித்து பின் இந்த கலையை கற்று கொண்டிருக்கிறார்கள். 

எப்போதுமே கோபமாகவும், டென்ஷனாகவும் பிறரை சத்தம் போட்டு மிரட்டிக்கொண்டு இருப்பவர்கள் தங்களை அறியாமல் தனக்கு வரும் துன்பங்களை, எரிச்சல்களை பிறர் மீது செலுத்துவதில் தன் துன்பம் நீங்கிவிட்டது போல் நினைக்கிறார்கள். சத்தமாக பேசி பிறரை புண்படுத்தி விட்டு தான் வெற்றி பெற்றாதாக நினைத்து நிம்மதி அடைகிறார்கள். 

பெரும்பாலும் இரண்டாவது வகை மனிதர்களுடன் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் தான் முதல் வகை மனிதர்களாக விரைவில் மாறுகிறார்கள். 

கோபத்தை கருணையாகவும், வெறுப்பை அன்பாகவும் மாற்றும் திரிபு சாத்தியம் தான் என தெரிந்தால் சத்தமாக பேசி தன் ஆளுமையை நிலை நாட்ட பாடுபடுபவர்கள் தங்கள் நேரத்தையும், சக்தியையும் பெருமளவு மிச்சப்படுத்தி ஆக்க பூர்வமான செயலில் ஈடுபடலாம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக